பதிவு செய்த நாள்
24 ஆக2011
00:55
சென்னை: அலகாபாத் பேங்க், பண்டிகை காலத்தையொட்டி, பல்வேறு கடன்களுக்கு வட்டிச் சலுகைகளையும், பரிசீலனை மற்றும் ஆவணப் பதிவு கட்டணங்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.இதன்படி, தனி நபர் கடன், கார் கடன், மருத்துவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 1.50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி 1 சதவீதம் வரையிலும்,விண்ணப்ப பரிசீலனை கட்டணத்தில் 50 சதவீதமும், விழாக்கால சிறப்பு தள்ளுபடி திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வர்த்தக வாகனக் கடனுக்கான ஆவணப் பதிவுக் கட்டணத்திலும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி திட்டம், நடப்பாண்டு டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|