பதிவு செய்த நாள்
24 ஆக2011
00:51
சென்னை: டி.வி.எஸ் அண்டு சன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சென்னை - சோழவரத்தில் அசோக் லேலண்டு நிறுவனத்தின், ஜெனரேட்டர் என்ஜின் களுக்கான ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை தொடங்கி உள்ளது.2.50 கோடி ரூபாய் செலவில், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் ஜெனரேட்டர் என்ஜின்கள் ஒருங்கிணைப்பு செய்து அளிக்கப்படும் என, டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.தினேஷ் கூறினார். இந்த ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில், முதல் கட்டமாக ஆண்டுக்கு, 14,500 ஜெனரேட்டர் என்ஜின்கள் ஒருங்கிணைப்பு செய்யப்படும். பின்பு இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு 30,000 மாக அதிகரிக்கப்படும். அசோக் லேலண்டு நிறுவனத்திற்கென இந்த பிரத்யேக தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறுவனத்தின் மீது, அசோக் லேலண்டு நிறுவனத்திற்குள்ள நம்பிக்கையை இந்த கூட்டு திட்டம் வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு, 10 முதல் 2,000 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் என்ஜின்கள் ஒருங்கிணைத்து தரப்படும் என, தினேஷ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|