பதிவு செய்த நாள்
23 ஆக2011
16:42
மும்பை: குறைந்த விலையில் கிடைத்த ஐ.டி., நிறுவனப்பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்ட வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 156.77 புள்ளிகள் உயர்ந்து 16,498.47 புள்ளிகளாக இருந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 50.10 புள்ளிகள் உயர்ந்து 4,948.90 புள்ளிகளாக இருந்தது. உலக பொருளாதாரத்தை ஊக்குவிக்க அமெரிக்கா அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளதாக வந்த தகவலும், குறைந்த விலையில் கிடைத்த ஐ.டி., நிறுவனப்பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்ட வாங்கியதாலும் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டதாக முகவர்கள் தெரிவித்தனர். இந்திய பங்குச்சந்தைகளைப்போன்றே, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|