பதிவு செய்த நாள்
25 ஆக2011
12:48
புதுடில்லி : நாட்டில் முதல் முறையாக பெட்ரோல் பங்க்குகளில் ஷெல்ஃப் சர்வீஸ் முறையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இம்முறை தலைநகர் டில்லியில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. டில்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொறுப்பு பொது மேலாளர் அம்ரிஷ் கபூர் இதனை துவக்கி வைத்தார். இந்த புதிய சேவையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெட்ரோலின் அளவை பெட்ரோல் பங்க்கில் உள்ள தானியங்கி கணினியில் குறிப்பிட்டால், வாகனத்தில் ஏற்கனவே இருக்கும் அளவிற்கு ஏற்றாற் போல் பெட்ரோல் நிரப்பப்படும். அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முறையை கற்றுக் கொடுக்கவும், அவர்களுக்கு உதவுவதற்கும் உதவியாளர்கள் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் தானியங்கி இயந்திரம், பெட்ரோல் நிரப்பும் மிஷின் ஆகியவற்றை காணிப்பார். வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் உதவியாளரே பெட்ரோலை நிரப்பி, அதற்கான தொகையையும் வசூல் செய்து கொள்வார். இந்த ஷெல்ஃப் சர்வீஸ் முறை இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|