வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் ... இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
'பங்குச் சந்தையில் மீண்டும் காளை தலை காட்டுகிறது...சென்செக்ஸ்' ஒரே நாளில் 567 புள்ளிகள் அதிகரிப்பு­­
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
00:29

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான, திங்கட்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறத் தொடங்கின. சென்ற வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னகி, அமெரிக்காவின் பொருளாதாரம், நடப்பாண்டில், பிற்பகுதியில் இருந்து வளர்ச்சி காண தொடங்கும் என்றார். எந்த அளவிற்கு முதலீடுகள் இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. என்றாலும், வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, அன்றைய தினம், அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடு பிடித்தது. குறிப்பாக, டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ஒரு சதவீதம் அதிகரித்து, 11,284.54 புள்ளிகளில் நிலை பெற்றது. இந்நிலையில், நேற்று நம் நாட்டிற்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கப்பட்ட,சீனா தவிர்த்த, ஜப்பான், தென்கொரியா,ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும், பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, நம் நாட்டின் மொத்த வருவாயில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மூலம், 50 சதவீத வருவாயை பெற்று வரும், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஐ.டி., துறையின் குறியீட்டு எண் 5.06 சதவீதம் அதிகரித்து, 4,958.90 புள்ளிகள் வரை சென்றது. டி.சி.எஸ் (7.32 சதவீதம்), விப்ரோ (3.12 சதவீதம்) உள்ளிட்ட பல ஐ.டி., துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இது தவிர, வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. கடந்த 6 மாதங்களுக்கு பின், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' ஒரே நாளில், வர்த்தகத்தினிடையே 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்திருந்தது. சென்ற, மார்ச் 1ம் தேதியன்று 'சென்செக்ஸ்' 623 புள்ளிகள் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 567.50 புள்ளிகள் அதிகரித்து, 16,416.33 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 16,462.03 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,068.73 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.தேசியப் பங்குச் சந்தையிலும், பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 171.80 புள்ளிகள் அதிகரித்து, 4,919.60 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 4,934.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,806.05 புள்ளிகள் வரையிலும் சென்றது. பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்ததையடுத்து, பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், திங்களன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) நிறுவனம், மீண்டும் முதலிடத்திற்கு வந்தது.கடந்த ஒரு மாத காலமாக, ஆர்.ஐ.எல், ஓ.என்.ஜி.சி, மற்றும் கோல் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களுக்கிடையே போட்டி இருந்து வந்தது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட சுணக்க நிலையால், ரிலையன்ஸ் (ஆர்.ஐ.எல்.) நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த ஒரு சில மாதங்களாக, படிப்படியாக குறைந்து வந்தது. இதனால், கடந்த 2006ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த இந்நிறுவனத்தை, பின்னுக்குத் தள்ளி, ஆகஸ்ட் 17ம் தேதி, கோல் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அடுத்த ஒரு சில தினங்களில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்ததையடுத்து, ஆர்.ஐ.எல். நிறுவனம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திங்களன்று, ஆர்.ஐ.எல். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 2 லட்சத்து, 46 ஆயிரத்து, 883 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதையடுத்து இந்நிறுவனம், முதலிடத்தை பிடித்தது. திங்களன்று இதன் பங்கின் விலை, 4.80 சதவீதம் அதிகரித்து, 754.05 ரூபாயில் கைமாறியது.இரண்டாவது இடத்திலுள்ள, ஓ.என்.ஜி.சி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 2 லட்சத்து, 35 ஆயிரத்து, 233 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் விலை, 1.10 சதவீதம் சரிவடைந்து, 274.95 ரூபாயில் நிலைபெற்றது.மூன்றாவது இடத்திலுள்ள, கோல் இந்தியா நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 2 லட்சத்து, 33 ஆயிரத்து, 263 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் விலை, 2.65 சதவீதம் உயர்ந்து, 369.30 ரூபாய்க்கு கைமாறியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)