பதிவு செய்த நாள்
30 ஆக2011
16:38
மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்ற தகவலையும் மீறி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பொதுவாக உலக பங்குச்சந்தைகளில் இன்று நல்ல ஏற்றம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்திலேயே முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 567.50 புள்ளிகளும், இன்று தொடர்ந்து 260.42 புள்ளிகளும் உயர்ந்து, இன்றைய வர்த்தக நேர முடிவில் 16,676.75 புள்ளிகளாக இருந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.40 புள்ளிகள் உயர்ந்து 5001 புள்ளிகளாக இருந்தது. இன்றைய பங்குவர்த்தகத்தின் போது, ரியாலிட்டி, உலோகம், வங்கித்துறை மற்றும் ஐ.டி., பங்குகள் நல்ல முன்னேற்றம் பெற்றிருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|