பதிவு செய்த நாள்
09 செப்2011
15:34
நாசிக்: வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதித்த மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக்கில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காய ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கும் முடிவினை நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மகாராஷ்டிரா மாநில? விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் வேளாண் உற்பத்தி சந்தை குழுவினைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுகளில் வெங்காயம் ஏலம் எடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புதெரிவித்து ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மேலும் வெங்காய விலைஏற்றத்தினை கட்டுப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் மாநிலத்தின் முக்கிய மார்க்கெட்டுகளில் வெங்காயத்தினை ஏலம் எடுக்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|