பதிவு செய்த நாள்
10 செப்2011
00:11
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 7 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 65 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1 லட்சத்து 77 ஆயிரம் டன்னாக இருந்தது என, இந்திய சோயா பதப்படுத்துவோர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயா புண்ணாக்கு, கோழி மற்றும் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 64 சதவீதம் அதிகரித்து, 5 லட்சத்து 51 ஆயிரம் டன்னிலிருந்து, 9 லட்சத்து 2 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.சோயா பருவம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இவ்வகையில், அக்டோபர் முதல் ஆகஸ்ட் வரையிலான 11 மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 90 சதவீதம் அதிகரித்து, 20 லட்சத்து 56 ஆயிரம் டன்னிலிருந்து, 39 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, ஜூலை முதல் 2011ம் ஆண்டு ஜூன் வரையிலான சோயா சாகுபடி காலத்தில், 1 கோடியே 27 லட்சம் டன் சோயா உற்பத்தி ஆகியிருக்கும் என, மத்திய அரசின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|