பதிவு செய்த நாள்
10 செப்2011
00:23
புதுடில்லி:நடப்பு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, 230 கோடி டாலராக (10 ஆயிரத்து 580 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான ஜூலையில் 270 கோடி டாலராக ( 12 ஆயிரத்து 420 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிரிட்டிஷ் விர்ஜின் ஐலண்ட் நிறுவனத்தில், 65.60 கோடி டாலரை (3,018 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. இதே போன்று, ஜி.எம்.ஆர் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டில் உள்ள இதன் துணை நிறுவனமான, ஜி.எம்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தில், 23.30 கோடி டாலரை (1,072 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. இந்திய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக அயல்நாடுகளில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில்சர்வதேதசஅளவில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீட்டில் ”சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|