பதிவு செய்த நாள்
11 செப்2011
00:21
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 160 கோடி டாலர் (7,360 கோடி ரூபாய்) அதிகரித்து, 32 ஆயிரத்து 78 கோடி டாலராக (14 லட்சத்து 75 ஆயிரத்து 588 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 96 கோடி டாலர் (4,393 கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து 918 கோடி டாலராக (14 லட்சத்து 68 ஆயிரத்து 205 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது. ஆக, தொடர்ந்து மூன்று வாரங்களாக நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.6 கோடி டாலர் (74 கோடி ரூபாய்) குறைந்து, 298 கோடி டாலராக (13 ஆயிரத்து 708 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 2 கோடி டாலர் சரிவடைந்து (92 கோடி ரூபாய்) 462 கோடி டாலராக (21 ஆயிரத்து 252 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.உலகளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 297 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|