பதிவு செய்த நாள்
13 செப்2011
05:20
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சென்ற வெள்ளிக் கிழமையன்று, அமெரிக்காவின் டோவ்ஜோன்ஸ் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 300 புள்ளிகள் வீழ்ச்சிக் கண்டு, 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்தது. இந்நிலையில், நேற்று ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி 3.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதனால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலையில் கைமாறின. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் என, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 365.23 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,501.74 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,668.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,393.04 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்öŒக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலீவர், சிப்லா மற்றும் ஓ.என்.ஜி.சி., ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 112.65 புள்ளிகள் குறைந்து,4,946.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,985.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,911.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|