பதிவு செய்த நாள்
14 செப்2011
05:42
பெங்களூரு : இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"எந்த முறையில் பங்கு விற்பனை மேற்கொள்வது என்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு பிறகே இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' என்று தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ராணுவ விமானங்களை தயாரித்து வருகிறது. சென்ற 2010ம்ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய் விற்று முதலைக் கண்டு வரும் இந்நிறுவனம். வரும் 10 ஆண்டுகளில், விரிவாக்கத் திட்டங்களுக்காக 20ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|