இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 10 சதவீத பங்குகளை விற்க திட்டம்இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 10 சதவீத பங்குகளை விற்க திட்டம் ... அன்னிய முதலீட்டை அனுமதித்தால் சில்லரை விற்பனை சந்தை  ரூ.37 லட்சம் கோடியாக உயரும் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் சில்லரை விற்பனை சந்தை ரூ.37 லட்சம் கோடியாக ... ...
பஜாஜ் இந்துஸ்தான்: உரிமைப் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2011
05:43

புதுடில்லி : பஜாஜ் இந்துஸ்தான் நிறுவனம், உரிமைப் பங்குகளை வெளியிட்டு, 1,644 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. ஒரு பங்கிற்கு இரண்டு உரிமைப் பங்குகள் வழங்குவதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14 சர்க்கரை ஆலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நிலுவையிலுள்ள அதன் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு உரிமைப் பங்குகளை வெளியிட்டு 1,644 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள உள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உரிமைப் பங்கு வெளியீட்டிற்கு இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், உரிமைப் பங்கு ஒன்றின் விலையை 36 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், இப்பங்கின் விலை 52 ரூபாய் 45 காசு என்ற அளவில் நிலை கொண்டது. ஆக, சந்தையை விட மிகக் குறைந்த விலைக்கு, உரிமைப் பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம், ஒரு பங்கிற்கு இரண்டு உரிமைப் பங்குகள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைப் பங்கை பெறுவதற்கான பதிவு நாள், வரும் 22ம் தேதியாகும். இந்த நாள் வரை, இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளவர்கள், உரிமைப் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம். பஜாஜ் இந்துஸ்தான் நிறுவனம், சர்க்கரை ஆலைகள் மட்டுமின்றி, தலா 1,980 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அனல் மின் திட்ட நிர்மாணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)