பதிவு செய்த நாள்
14 செப்2011
05:43
புதுடில்லி : பஜாஜ் இந்துஸ்தான் நிறுவனம், உரிமைப் பங்குகளை வெளியிட்டு, 1,644 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. ஒரு பங்கிற்கு இரண்டு உரிமைப் பங்குகள் வழங்குவதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14 சர்க்கரை ஆலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நிலுவையிலுள்ள அதன் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு உரிமைப் பங்குகளை வெளியிட்டு 1,644 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள உள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உரிமைப் பங்கு வெளியீட்டிற்கு இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், உரிமைப் பங்கு ஒன்றின் விலையை 36 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், இப்பங்கின் விலை 52 ரூபாய் 45 காசு என்ற அளவில் நிலை கொண்டது. ஆக, சந்தையை விட மிகக் குறைந்த விலைக்கு, உரிமைப் பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம், ஒரு பங்கிற்கு இரண்டு உரிமைப் பங்குகள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைப் பங்கை பெறுவதற்கான பதிவு நாள், வரும் 22ம் தேதியாகும். இந்த நாள் வரை, இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளவர்கள், உரிமைப் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம். பஜாஜ் இந்துஸ்தான் நிறுவனம், சர்க்கரை ஆலைகள் மட்டுமின்றி, தலா 1,980 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அனல் மின் திட்ட நிர்மாணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|