பதிவு செய்த நாள்
16 செப்2011
09:41
மும்பை : சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக 16 ஆயிரம் புள்ளிகளிலேயே இருந்து வந்த சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 171 புள்ளிகள் அதிகரித்து 17,047 புள்ளிகளாகவும், நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 5122 புள்ளிகளாகவும் இருந்தது. அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதாலும், ஐரோப்பா பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாலும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிற ஆசிய சந்தைகளான ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட பங்குச் சந்தைகளும் 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|