பதிவு செய்த நாள்
18 செப்2011
01:35
கொச்சி : நாட்டின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், 280 சதவீதம் அதிகரித்து 12 ஆயிரத்து 219 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 4,364 டன்னாக மிகவும் குறைந்து காணப்பட்டது. உள்நாட்டில், இயற்கை ரப்பரின் விலை குறைந்து காணப்பட்டதே ஏற்றுமதி மிகவும் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தரம் குறைவு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை ரப்பர் ஏற்றுமதி சரிவடைந்து காணப்பட்டது. உதாரணமாக, கடந்த 2010ம் ஆண்டில், ஒரு சில மாதங்களில் இயற்கை ரப்பர் ஏற்றுமதி மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இயற்கை ரப்பர் ஏற்றுமதி 1,082 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 17 டன்னாக இருந்தது. அதேபோல், சென்ற ஜூலை மாதம், இயற்கை ரப்பர் ஏற்றுமதி 779 டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு ஜூலை மாதம் 24 டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், இயற்கை ரப்பரின் விலை, சர்வதேச விலையுடன் ஒப்பிடும் போது, கிலோ ஒன்றுக்கு, 17 -19 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால், சர்வதேச வர்த்தகர்கள் இயற்கை ரப்பரை அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றனர். ரப்பரின் தரம் குறைவாக உள்ளது தான், நாட்டின் ரப்பர் ஏற்றுமதிக்கு இடர்பாடான அம்சமாக உள்ளது, இதன் விலை, மேலும், 12-15 ரூபாய் வரை குறையும்பட்சத்தில், சர்வதேச வாடிக்கையாளர்கள் அதிகளவில் ரப்பரை இறக்குமதி செய்து கொள்வார்கள். உள்நாட்டுக்கான ரப்பர் தேவைப்பாடு அதிகளவில் உள்ளது. இதனால், நம்நாடு, அதிகளவில் ரப்பர் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் ரப்பரின் விலை உயர்ந்துள்ளதால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், இந்தியாவிற்கான ரப்பர் இறக்குமதி, 11 சதவீதம் குறைந்து, 76 ஆயிரத்து 116 டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 85 ஆயிரத்து 58 டன்னாக உயர்ந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|