பதிவு செய்த நாள்
19 செப்2011
03:27
புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலங்களில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 83.10 கோடி டாலராக ( 3,740 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 104.10 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பு நிதியாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 20.2 சதவீதம் சரிவடைந்துள்ளது என வென்சர் இண்டலிஜன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறைக்கான தேவை பொதுவான அளவில் குறைந்து வருவது மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்டவை காரணமாக, தனியார் பங்கு முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர் என, பயர் கேப்பிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி ஓம் சவுத்ரி தெரிவித்தார். வணிக வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கும் கடன்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால், வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என வென்சர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|