அதிவேக வளர்ச்சியில் அலாப்ட் ஹோட்டல்ஸ் அதிவேக வளர்ச்சியில் அலாப்ட் ஹோட்டல்ஸ் ... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,800 கோடி முதலீடு அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,800 கோடி முதலீடு ...
தேசிய பங்குச் சந்தை அமைப்பு : டோவ் ஜோன்ஸ் குறியீட்டு எண்ணில் வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
03:30

சென்னை : அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, எஸ் அண்டு பி 500 மற்றும் டோவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரீயல் ஆவரேஜ் (டி.ஜே.ஐ.ஏ.,) குறியீட்டு எண்கள் மீது, ரூபாய் அடிப்படையிலான முன்பேர வர்த்தகத்தை தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.,) சென்ற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பங்குச் சந்தையின் மூத்த துணை தலைவர் ஆர்.சுந்தரராமன் கூறியதாவது: இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். "எஸ் அண்டு பி 500' பியூச்சர் காண்ட்ராக்டுகள் அமெரிக்காவிற்கு வெளியே, ஒரு நாட்டின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறை. இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் எளிதாக ஈடுபட இது வழி வகுக்கும். தேசிய பங்குச் சந்தையில், ஏற்கனவே வர்த்தகம் புரிந்து வருபவர்களும், இந்த புதிய வர்த்தகத்தில் ஈடுபடலாம். இதற்காக, கூடுதலாக எவ்வித முதலீடும் செய்யத் தேவையில்லை. இதில், ரூபாய் தொடர்பான, எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லாததால், இந்திய சந்தை நேரத்திலேயே வர்த்தகம் புரியலாம். என்.எஸ்.இ., முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப புதிய திட்டங்கள், சொத்து பிரிவுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தும். இத்திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்து, நாள்தோறும், 120 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. கடந்த செவ்வாய் கிழமையன்று, 180 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)