எரிவாயு உற்பத்தி 5.3 சதவீதம் சரிவுஎரிவாயு உற்பத்தி 5.3 சதவீதம் சரிவு ... டிஜிட்டல் மயமாகிறது கேபிள் "டிவி' : அடுத்த மார்ச்சில் அமல் டிஜிட்டல் மயமாகிறது கேபிள் "டிவி' : அடுத்த மார்ச்சில் அமல் ...
பணவீக்கத்தை சமாளிக்க உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் : உலக வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2011
04:27

புதுடில்லி : தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் பணவீக்கத்தை சமாளிக்க வேண்டுமென்றால், உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2000மாவது ஆண்டில், இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்த உணவு தானியங்களில் 1 -1.6 கோடி டன் வீணாகியுள்ளது. உணவு தானியங்களை சேமித்து வைக்க போதுமான கிடங்குகளோ அல்லது அவற்றை பாதுகாக்கும் தொழில்நுட்ப வசதிகளோ இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய உணவு கழகத்தின் இயலாமை காரணமாக, உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் பெருத்த இழப்பும், அவற்றை கையாள்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, உணவு தானியங்களை கொள்முதல் செய்வது மற்றும் கிடங்குகளில் சேமிப்பது ஆகியவற்றுக்காக, இந்திய உணவு கழகம் அதிகம் செலவழிக்கிறது. உணவுதானியங்களின் கொள்முதல் செலவு அதிகமாக உள்ளதால், ஒட்டுமொத்த மொத்த நிதிச் செலவினம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல், கோதுமை ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கை, இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. இத்துடன், மக்காச் சோளம், கம்பு உள்ளிட்ட உணவு தானியங்களை, அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது. இந்த உணவு தானியங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் பெருகி வருவதற்கேற்ப, உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனினும், இவற்றில், உணவு தானியங்களுக்கான தேவையை விட, பருப்பு வகைகள், பழங்கள், மாமிசம், முட்டை மற்றும் பால்பொருள்களுக்கான தேவை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வேளாண் துறை சார்ந்த பொது வினியோக திட்டத்தால், நிதிச் செலவினம் அதிகரிக்கிறது. எனினும், இது உணவு தானிய உற்பத்தியை உயர்த்தவும் துணை புரிகிறது. அதே சமயம், உணவுப் பொருள் பணவீக்க உயர்வு, உணவுப் பொருள் விலையேற்றம் ஆகியவை, உணவு தானியங்கள் சாராத இதர உணவுப் பொருள்களின் அளிப்பு குறைவதற்கு காரணமாக உள்ளன. மானியம் வழங்கப்படுவதன் காரணமாக, நீர் வளங்கள் அளவிற்கு மீறி பயன்படுத்தப்படுகின்றன. மின்சார பயன்பாட்டால் அதிக செலவினம் ஏற்படுகிறது. ரசாயன உரங்களால் நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. இத்தகைய செலவினங்கள், உற்பத்தியை அதிகரிக்க துணை புரிபவையாக இல்லை. இதற்கு பதிலாக, வேளாண் வளர்ச்சியை அதிகரிக்கவும், வறுமையை ஒழிக்கவும், வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் கிராமப்புறங்களில் சாலை வசதிகள் ஆகியவற்றில் முதலீடு மேற்கொள்வது பயனளிக்கும். இந்தியாவில் 90'களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உணவு மற்றும் உரங்களுக்கான மானியம் ஒரு சதவீதமாக இருந்தது. இது, 2008-09ம் நிதியாண்டில் 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓரளவிற்கும், பொது வினியோகத்திற்காக மேற்கொள்ளப்படும் அதிக அளவிலான கொள்முதல், தனியார் துறையை பாதிப்பதாக உள்ளது. வரிகள் மற்றும் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கு உள்ள கடுமையான விதிமுறைகள் ஆகியவையும், தடைக்கற்களாக உள்ளன. சணல் பேக்கேஜிங்கிற்கான விதிமுறைகள், அடிக்கடி திருத்தப்படும் அத்தியாவசிய விளைபொருள்கள் சட்டம், உணவு தானியங்களை சந்தைப்படுத்தும் துறையில் குறைவாக உள்ள தனியார் முதலீடு, சங்கிலித் தொடர் வினியோகத்தில் போதுமான முதலீடு இல்லாதது மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள விதிமுறைகள் ஆகியவை வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளன. பொது பணவீக்கத்தை கட்டுப்படுத்த, உணவு தானிய சேமிப்பு நிர்வாகம் உள்ளிட்ட ஐந்து அம்ச கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். முன்னேறிய நாடுகளை விட, தெற்காசிய நாடுகளில், உணவு தானிய தேவை சார்ந்த நிர்வாக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நீண்ட கால அடிப்படையில், உணவுப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, நீர் மேலாண்மை திட்டத்தை மேலும் செம்மையாக செயல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், ஊரக கட்டமைப்பை மேம்படுத்துவது, பரந்துபட்ட விவசாயம், வேளாண் துறை மற்றும் சந்தைப்படுத்தும் துறைகளில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். எந்த அளவிற்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துள்ள உணவு தானியங்களை உருவாக்குவது என்பது குறித்தும், ஊட்டச் சத்தின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பட்ஜெட் அறிவிப்புகளால் பாதிக்கப்பட்ட பிரிவுகளைக் கண்டறிந்து, அவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)