பதிவு செய்த நாள்
29 செப்2011
00:36
புதுடில்லி:உலகளவில் மொபைல் போன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை, வரும் 2014ம் ஆண்டில் 24 ஆயிரத்து 500 கோடி டாலர் (11 லட்சத்து 52 ஆயிரம் கோடி) அளவிற்கு உயரும் என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:வரும் 2014ம் ஆண்டில், இவ்வகையிலான பணப் பரிவர்த்தனை 24 ஆயிரத்து 500 கோடி டாலராக உயரும். அதே சமயம், இத்தகைய மொபைல் போன் வழியிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோர் எண்ணிக்கை 34 கோடியாக உயரும். இது, சர்வதேச அளவில் தற்போதுள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களில் 5 சதவீதமாகும். கடந்த 2009ம் ஆண்டு 8.13 கோடி பேர், மொபைல் போன் வாயிலாக 6,900 கோடி டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தொகை அதிகம் உள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மொபைல் போன் பயன்பாடு பெருகி வருகிறது. குறிப்பாக, வங்க தேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய வளரும் நாடுகளில், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வங்கிச் சேவை இல்லாத இந்நாடுகளில்,மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், மணிபர்ஸ் போல் ஸ்மார்ட் போன்களில் பணத்தை நிரப்பிக் கொள்ளும் "ஈ-வாலெட்' பயன்பாடு அதிகரித்து வருகிறது. உலகளவில், மொபைல் போன் வாயிலான பணப்பரிமாற்றத்தில், குறுந்தகவல் சேவை மூலம் பணம் செலுத்தும் முறை, முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|