ஆன்-லைன் வர்த்தகத்தில் சென்னைக்கு 5வது இடம்இபே இந்தியா ஆய்வறிக்கையில் தகவல்ஆன்-லைன் வர்த்தகத்தில் சென்னைக்கு 5வது இடம்இபே இந்தியா ஆய்வறிக்கையில் ... ... பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு மாற்றுத்திட்டம்:மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு மாற்றுத்திட்டம்:மத்திய ... ...
உலகளவில் மொபைல் போன் வாயிலான பணப்பரிமாற்றம் 24,500 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
00:36

புதுடில்லி:உலகளவில் மொபைல் போன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை, வரும் 2014ம் ஆண்டில் 24 ஆயிரத்து 500 கோடி டாலர் (11 லட்சத்து 52 ஆயிரம் கோடி) அளவிற்கு உயரும் என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:வரும் 2014ம் ஆண்டில், இவ்வகையிலான பணப் பரிவர்த்தனை 24 ஆயிரத்து 500 கோடி டாலராக உயரும். அதே சமயம், இத்தகைய மொபைல் போன் வழியிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோர் எண்ணிக்கை 34 கோடியாக உயரும். இது, சர்வதேச அளவில் தற்போதுள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களில் 5 சதவீதமாகும். கடந்த 2009ம் ஆண்டு 8.13 கோடி பேர், மொபைல் போன் வாயிலாக 6,900 கோடி டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தொகை அதிகம் உள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மொபைல் போன் பயன்பாடு பெருகி வருகிறது. குறிப்பாக, வங்க தேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய வளரும் நாடுகளில், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வங்கிச் சேவை இல்லாத இந்நாடுகளில்,மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், மணிபர்ஸ் போல் ஸ்மார்ட் போன்களில் பணத்தை நிரப்பிக் கொள்ளும் "ஈ-வாலெட்' பயன்பாடு அதிகரித்து வருகிறது. உலகளவில், மொபைல் போன் வாயிலான பணப்பரிமாற்றத்தில், குறுந்தகவல் சேவை மூலம் பணம் செலுத்தும் முறை, முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)