பதிவு செய்த நாள்
30 செப்2011
00:41
ஐதராபாத்:இரும்புத் தாது உற்பத்தி யில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 2,782 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 2,517 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், நிறுவனத்தின் இரும்புத்தாது உற்பத்தி, 57.60 லட்சம் டன்னிலிருந்து, 60.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. உருக்கு உற்பத்திக்கு அத்தியாவசிய மூலப்பொருளான இரும்புத்தாது பற்றாக்குறையால், உருக்கு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் இரும்புத்தாது உற்பத்தி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டில்லியில் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பென்னி பிரசாத் வர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், என்.எம்.டீ.சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, என்.எம்.டீ.சி நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது என, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|