பதிவு செய்த நாள்
29 செப்2011
16:59
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. வர்த்தகம் முடியும் போது, 252 புள்ளிகள் அதிகரித்து, 16,698.07 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 69.55 புள்ளிகளுடன், 5,015.45 புள்ளிகளில் நிலைகொண்டது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிந்து 16,446 புள்ளிகளாகவும், நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 4946 புள்ளிகளாகவும் இருந்தது. காலை நேர வர்த்தகத்தின் போது நிஃப்டி 5000 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் காணப்பட்டது. உணவு பணவீக்கம் தற்போது 9.13 சதவீம் அதிகரித்துள்ளது. எனினும் எண்ணெய் மற்றும் எரிவாயு, தொழில்நுட்பம், தனியார் வங்கிகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தேசிய பங்குச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இதற்கு காரணம் பின்லாந்து பாராளுமன்றத்தி்ல் கடன்சுமையினை குறைக்க வாக்கெடுப்பு, கிரீஸ், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிதிநிலையால் சிக்கன நடவடிக்கை உள்ளிட்ட காரணங்கள் தான் என கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|