சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 286 புள்ளிகள் வரை சென்றதுசரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 286 புள்ளிகள் வரை சென்றது ... பி.எஸ்.இ. "சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி பி.எஸ்.இ. "சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி ...
வங்கி வட்டி விகித உயர்வால் சிறு தொழில்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2011
02:22

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை அடிக்கடி அதிகரிப்பதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன.தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், ஜவுளி, தோல், இரும்பு வார்ப்படம், பிளாஸ்டிக் உள்ளிட்ட, 8,000க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம், 32 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. பெரும்பாலானோர் தங்களது நிறுவன வளர்ச்சிக்காகவும், புதிதாக தொழில் துவங்கவும் வங்கிக் கடன் பெறுகின்றனர். ஆரம்ப காலத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில், அதிக பிரச்னைகள் இருந்தன. 1969ம் ஆண்டு, 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதும், வங்கிக் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும் உயர்ந்து விடுகிறது. நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரை, வங்கிகளுக்கான, வட்டி விகிதத்தை, 12 முறை உயர்த்தியுள்ளது.இதனால், வங்கிக் கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு மார்ச் மாதம், இந்நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டி, 10 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, தற்போது, 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகள், கடனுக்கான வட்டியை தவறாமல் செலுத்துவதற்கு, மூன்று மாதம் வரை கால அவகாசம் வழங்குகின்றன.தொடர்ந்து வட்டி செலுத்த இயலாத, தொழில் நிறுவனங்களை கடனை ஒழுங்காக செலுத்த தவறியவர்கள் பட்டியலில் சேர்த்து விடுகின்றன. இதனால், அந்நிறுவனங்களால், தொடர்ந்து, கடன் பெற்று தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகிறது. இந்நிறுவனங்கள், வங்கி வட்டியை செலுத்த, தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. வட்டி அதிகரித்தாலும், பொருட்களின் விலையை கூட்டி விற்பனை செய்ய முடியாததால், பெரும் நஷ்டத்தை இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சிக்கித் தவிக்கும் சிறு நிறுவனங்களை, வட்டி உயர்வு அதிக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.இதனால், தொடர்ந்து தொழில் நடத்த முடியாத சூழலில் பல குறு, சிறு நிறுவனங்கள் மூடும் அபாயத்தில் உள்ளன. எனவே, தமிழக அரசு அறிவித்த வட்டி தள்ளுபடியை, அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும், அமல்படுத்த, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, "டான்ஸ்டியா' அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் மோகன் கூறியதாவது:பணவீக்கத்தை காரணம் காட்டி, ரிசர்வ் வங்கி, வட்டியை அடிக்கடி உயர்த்துவது தவறான கொள்கை. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே செலவழிப்பர். வட்டி கூடுவதால், செலவழிக்கப்படும் தொகை குறைந்து, விலைவாசி குறையும் என்பது மேற்கத்திய நாடுகளின் தத்துவம். இது, நம் நாட்டிற்கு பொருந்தாது. வட்டி உயர்வு, சிறு நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்துள்ளது.சிறு தொழில் நிறுவனங்களுக்கு,"டிக்', மூலம் வழங்கப்படும் கடனில், 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, வரவேற்கத்தக்கது. அதை, அனைத்து பொதுத் துறை வங்கிகளும், கடைபிடிக்க, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு மோகன் கூறினார். நாடு முழுவதும், 2.60 கோடி சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை, நாட்டின் மொத்த உற்பத்தியில், 8 சதவீதம், உற்பத்தித் திறனில், 45 சதவீதம், ஏற்றுமதியில், 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இவற்றின் மூலம், 6 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் தான், 11 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 7.90 லட்சம் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்யப்பட்டன.இதன் மூலம், 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்திய அளவில், இப்பிரிவுகளின் பங்களிப்பு, 15.7 சதவீதம் என்றளவில் உள்ளது. - வீ.அரிகரசுதன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)