பதிவு செய்த நாள்
07 அக்2011
02:16
சென்னை:எல்.ஐ.சி நிறுவனம், நடப்பு அக்டோபர் மாதத்தை,சமூக பாதுகாப்பு மாதமாக அறிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை,சமூக பாதுகாப்பு மாதமாக கொண்டாடுகிறது. மத்திய அரசு சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியோர் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.சமூக பாதுகாப்பிற்கான இத்திட்டங்களின் கீழ், ஆயுள் காப்பீட்டு வசதி அளிக்கும் பொறுப்பு, எல்.ஐ.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 1987ம் ஆண்டு முதல், எல்.ஐ.சி., நிறுவனம்,சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. கடந்த 1988ம் ஆண்டுசமூக பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நலிந்த பிரிவினருக்கான, குழு காப்பீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரிமியத்திற்கு, எல்.ஐ.சி மானியம் வழங்குகிறது.இதன்படி, ஜனஸ்ரீ பீமா யோஜனா,ஆம் ஆத்மி பீமா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஆயுள் காப்பீட்டு வசதியை, எல்.ஐ.சி.,நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|