பதிவு செய்த நாள்
07 அக்2011
02:18
கோபிசெட்டிபாளையம்:உரத்துக்கான, "டி கன்ட்ரோல்' முறையை மத்திய அரசு விலக்கிக் கொண்டதால், ரசாயன உரங்களின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் டெல்டா பாசனம் மூலம், 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பயறு வகைகள் ஆண்டுக்கு இருபோகம் சாகுபடி செய்யப்படுகிறது. பாசனப் பகுதிகளில் மண் அமைப்புக்கு ஏற்றவாறு தழை, மணி, சாம்பல் சத்துகள் அடங்கிய யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், டீ.ஏ.பி., மற்றும் சல்பேட் போன்ற உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.உர மானியத் திட்டத்தில் விவசாயி களுக்கு தேவையான உரத்தை, உர உற்பத்தியாளர் கள் வழங்க வேண்டும். உரத்தின் உற்பத்தி விலை அதிகரிக்கும் பட்சத் தில் கூடுதல் விலையையும் அரசு மானியமாக வழங்கி வந்தது. இதுவே, "டி கன்ட்ரோல்' முறை. "உர உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை, அரசு மானியமாக வழங்க வேண்டிய தில்லை. கூடுதல் விலையை விவசாயிகளே கொடுத்து, உரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று நந்தன் நீல்கனி தலைமை யிலான குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.மத்திய அர” இதை ஏற்று,ஏப்ரல் 1ம் தேதி முதல் இத்திட்டத்தை அமல்படுத்தி யது. 2012 மார்ச், 31ம் தேதி வரை இம்முறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையால் உர நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் உரத்தின் விலையை உயர்த்த துவங்கிவிட்டன. 450 ரூபாய்க்கு விற்ற டீ.ஏ.பி., 782 ரூபாய், 185 ரூபாய்க்கு விற்ற சூப்பர் பாஸ்பேட், 280 ரூபாய், 225 ரூபாய்க்கு விற்ற பொட் டாஷ், 550 ரூபாய், 420 ரூபாய்க்கு விற்ற, 20:20 கலப்பு உரம், 740 ரூபாயாக உயர்ந்தது.உரங்களின் விலையை அடுத்த வாரம் மேலும் உயர்த்த, உர நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உரங்களின் விலை மேலும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி கூறியதாவது:தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 1.50 லட்சம் டன் உரம் தேவைப்படுகிறது. சென்ற ஏப்ரல் மாதத்துக்கு முன் வரை உரத்தின் விலை அதிகரிக்கும் போது, கூடுதல் விலையை அரசு செலுத்தி வந்தது. புதிய மானியக் கொள்கையால், அர” அளித்து வந்த கூடுதல் விலையை நிறுத்தி விட்டது. சர்வதேச விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பது போல், உரங்களின் விலையை, உர நிறுவனங்கள் நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றன. அடுத்த வாரத்தில், டீ.ஏ.பி., 900 ரூபாய், பொட்டாஷ் 700 ரூபாய் என உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பித்து, அனைத்து பகுதிகளிலும் சாகுபடி பணி மும்முரமாகத் துவங்கியுள்ள நேரத்தில், உரம் விலை உயர்ந்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.இதனால், விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபாடு குறைந்து, எதிர்காலத்தில் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு தளபதி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|