பதிவு செய்த நாள்
07 அக்2011
02:20
புதுடில்லி:நாட்டின் தேயிலை உற்பத்தி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 3 சதவீதம் உயர்ந்து, 12.70 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 12.27 கோடி கிலோவாக இருந்தது.இதே காலத்தில், தேயிலை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து, 1.68 கோடி கிலோவிலிருந்து, 1.94 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து, 61.86 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதங்களில், 58.49 கோடி கிலோவாக இருந்தது.இருப்பினும், நடப்பாண்டில் ஜனவரி - ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் மேற்கொள்ளப் பட்ட தேயிலை ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 12 சதவீதம் குறைந்து, 12.41 கோடி கிலோவிலிருந்து, 10.92 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பிற்கு, அசாம் மாநிலத்தில் இதன் உற்பத்தி சிறப்பான அளவில் உயர்ந்ததே முக்கிய காரணமாகும். இம்மாநிலத்தின் தேயிலை விளைச்சல், 7 சதவீதம் உயர்ந்து, 8.41 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 7.86 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலத்தின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், வட இந்திய மாநிலங்களின் தேயிலை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து, 11.27 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 10.78 கோடி கிலோவாக இருந்தது. எனினும், இதே காலத்தில், தென்னிந்திய மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 1.49 கோடி கிலோவிலிருந்து, 1.43 கோடி கிலோவாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பிற்கு, வட இந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் ஏற்றுமதி அதிகரிப்பே முக்கிய காரண மாகும்.இதன்படி, சென்ற மாதத்தில், வட இந்திய மாநிலங்களின் தேயிலை ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்து, 1.10 கோடி கிலோவாக உள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், 89 லட்சம் கிலோவாக இருந்தது. மேலும், இதே காலத்தில், தென்னிந் திய மாநிலங்களின் தேயிலை ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்து, 78 லட்சம் கிலோவிலிருந்து, 84 லட்சம் கிலோவாக அதிகரித் துள்ளது.நடப்பு 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல் -ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி 6.96 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டின், இதே மாதங்களில், 7.02 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது. உலகளவில், இந்தியா, தேயிலை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பயன்பாட்டில் முதலிடத்திலும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|