ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு ... ரயில்வே துறையின் வருவாய் ரூ.48,947 கோடியாக உயர்வு ரயில்வே துறையின் வருவாய் ரூ.48,947 கோடியாக உயர்வு ...
வறுமையில் வாடுவோருக்காக அமெரிக்கா 16,700 கோடி டாலர் செலவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2011
10:31

அமெரிக்க அரசு, வறுமையில் வாடுவோருக்காக செலவிடும் தொகை ஆண்டுக்கு 16,700 கோடி டாலர் (சுமார் ரூ.8.19 லட்சம் கோடி) என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், கடந்த சில வருடங்களாக வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், குறைந்த ஊதியம் போன்றவையே வறுமைக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலை அங்கு பலரை வறுமையில் தள்ளியிருக்கிறது. எனவே, மக்களின் வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை அமெரிக்க அரசே பூர்த்தி செய்து வருகிறது. அமெரிக்காவில், 2007ம் ஆண்டில், வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 3.68 கோடியாக இருந்தது. இது, 2010ம் ஆண்டில் 4.88 கோடியாக உயர்ந்துள்ளது. அங்கு வறுமையில் சிக்கியவர்கள் எண்ணிக்கை12 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களுக்காக 2005ம் ஆண்டில் 9,000 கோடி டாலர்களை செலவிட்ட அமெரிக்க அரசு 2010ம் ஆண்டில் 16,750 கோடி டாலர் செலவிட்டுள்ளது. அதாவது, மருத்துவ வசதிக்காக 13,050 கோடி டாலரும், கல்விக்காக 1,920 கோடி டாலரும், அவசர உணவு தேவைக்காக 1,780 கோடி டாலரும் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமெரிக்கருக்கும், சராசரியாக 542 டாலர்செலவிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், வறுமை ஒழிப்புக்காக செலவிடப்பட்ட தொகை, மாகாணம் வாரியாக, அதிகபட்சமாக புளோரிடாவுக்கு 62 சதவீதம், கலிபோர்னியாவுக்கு 47 சதவீதம், மேரிலாந்துக்கு 44 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மசாசூட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டிஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக இத்தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)