செப்டம்பர் மாதத்தில்  கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவுசெப்டம்பர் மாதத்தில் கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவு ... எம்.ஆர்.எப். நிறுவனம்:விற்றுமுதல் ரூ.10,000 கோடியை தாண்டியது எம்.ஆர்.எப். நிறுவனம்:விற்றுமுதல் ரூ.10,000 கோடியை தாண்டியது ...
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்: ரூ.16,800 கோடி நிதி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2011
00:20

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி) நிறுவனம், மின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. வரிச் சேமிப்பு மற்றும் வரிவிலக்குடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 11 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், நடுத்தர கால அடிப்படையிலான, சர்வதேச கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 4,900 கோடி ரூபாயும் திரட்டும் வகையில் ஒப்புதல் பெற்றுள்ளது என, இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.மேற்கண்ட மொத்த நிதியில், 200 கோடி ரூபாயை திரட்டும் வகையில், இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் 29ம் தேதி, கடன் பத்திரங்களை வெளியிட்டது. பத்தாண்டுகளில் முதிர்வடையக்கூடிய கடன் பத்திரங்களுக்கு 8.50 சதவீத வட்டியும், 15 ஆண்டு காலத்திற்கான கடன் பத்திரங்களுக்கு 8.75 சதவீத வட்டியும் வழங்கப்படும். தற்போது, எந்த விதமான புதிய பங்கு வெளியீடுகளும் இல்லாததால், நிறுவனத்தின் கடன் பத்திர வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து, நல்லளவில் ஆதரவு கிடைக்கும் என நாகராஜன் குறிப்பிட்டார். நிறுவனம், வரிவிலக்குடன் கூடிய கடன் பத்திர வெளியீட்டையும் செப்டம்பர் 29ம் தேதி துவக்கியுள்ளது. இதன் வாயிலாக, 5,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரட்ட திட்டமிடப்பட்டுள்ள கடன் பத்திர வெளியீட்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், 4,900 கோடி ரூபாய் திரட்டப்படும். சந்தை நிலவரத்தை பொறுத்து, இவ்வெளியீடு, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)