பதிவு செய்த நாள்
14 அக்2011
00:18
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்டோபர் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.32 சதவீ தமா கக் குறைந்துள்ளது. இது, இதற்கும்முந்தைய வாரத்தில் 9.41 சதவீதமாக இருந்தது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், ஒரு சில உணவுப் பொருட்களின் விலை குறைந்திருந்தது. இருப்பினும், ஆண்டு கணக்கின் அடிப் படையில், இவற்றின் விலை அதிகரித்து இருந்தது. காய்கறிகள் விலை 13.01 சதவீதம் என்றளவிலும், உருளைக் கிழங்கின் விலை 3.79 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந் திருந்தது. மேலும்,பால் (10.35 சதவீதம்), பழங்கள் (12.19 சதவீதம்), முட்டை, இறைச்சி, மீன் (9.92 சதவீதம்) போன்றவற்றின் விலையும் ஆண்டுக் கணக்கில் அதிகரித்து காணப்பட்டது.இருப்பினும்,தானியங்கள் 5.41 சதவீதம் என்ற அளவிலும், அரிசி 5.86 சதவீதம் மற்றும் பருப்பு வகைகள் 6.87 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது.மேலும்,வெங்காயத்தின் விலை 10.15 சதவீதம் என்றளவிலும், கோதுமையின் விலை 0.24 சதவீதம் என்றளவிலும் குறைந்திருந்தது. முக்கிய பொருட்களின் விலை, 10.60 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 10.84 சதவீதம் என்றளவில் இருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய பொருட்கள் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.உணவு சாராத பொருட்களின் கீழ் இடம்பெற்றுள்ள நூலிழை மற்றும் தாதுப் பொருட்களின் விலை 9.59 சதவீதமாகக் குறைந்திருந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 10.77 சதவீதம் என்ற அளவில் சற்று அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|