பதிவு செய்த நாள்
15 அக்2011
00:36
சென்னை:கோவை பிராப்பர்டி சென்டர் நிறுவனம், சென்னையில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக குடியிருப்பு திட் டத்தை தொடங்க உள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.ஸ்ரீதரன் கூறியதாவது:நிறுவனம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக, சென்னை வண்டலூரில், "செரீன் ஆதிநாத்' என்ற குடியிருப்பை கட்ட உள்ளது.வரும் நவம்பரில் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். 8.6 ஏக்கரில், பசுமை யான, குளுமையான இயற்கை சூழலில், அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த குடியிருப்பு இருக்கும். பிரதான சமையல் கூடம், மருத்துவ வசதி, பொழுதுபோக்கு மையம், விளையாட்டுத் திடல் என பல்வேறு வசதிகளை கொண்டதாக இந்த குடியிருப்பு வளாகம் இருக்கும்.குடியிருப்புகளின் விலை 19 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை உள்ளது. வங்கிக் கடன் மூலம் எளிய தவணையில் பணம் செலுத்தி குடியிருப்பை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இதன் உரிமையாளர்கள் மாத பராமரிப்புக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|