தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் எண்ணெய், உளுத்தம் பருப்பு விலை சரிவுதீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் எண்ணெய், உளுத்தம் பருப்பு விலை சரிவு ... நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய ... ...
ஏற்றுமதியாளர்களின் அயல்நாட்டு அன்னியச் செலாவணி வரம்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2011
00:26

சென்னை:ஏற்றுமதியாளர்கள், ஒரு பரிமாற்றத்தின்போது அயல்நாட்டில் வைத்துக் கொள்ளும் அன்னியச்செலாவணி வரம்பை 500 டாலரில் இருந்து 3,000 டாலராக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஒரே வாரத்தில், ஏற்றுமதி தியாளர்களுக்கு அடுத்தடுத்து சலுகைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி, ஏற்றுமதியாளர்கள் ஆன்-லைன் வாயிலாக அயல் நாட்டு நிறுவனங்களிடம் இருந்து, ஒரு பரிவர்த்தனை யில் பெறும் தொகையின் வரம்பையும் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஆன்-லைன் மூலம், ஒரு பரிவர்த்தனையில் பெறும் தொகை 500 டாலரில் இருந்து 3,000 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சில தினங்களுக்கு முன்பு ஏற்றுமதியாளர்களுக்கு 900 கோடி ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்தது.இதன் மூலம் நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதியாளர்களுக்கு 1,700 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.இது குறித்து, தொழில் மற்றும் வர்த்தக துறை செயலர் ராகுல் குல்லார் கூறியதாவது: கைத்தறி, கைவினைப் பொருட்கள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வோருக்கும், சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர் களுக்கும் கடனுக்கான வட்டியில், 2 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்றுமதி யாளர்களுக்கு மேலும் 900 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 1,700 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளால் லத்தீன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் காமன் வெல்த் சுயாட்சி நாடுகளுக்கு பொறியியல் பொருட் கள், மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வோர் பெரிதும் பயனடைவர். இந்நாடு களுக் கான ஏற்றுமதியில் ஏற்கெனவே 3 சதவீத வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒரு சதவீதம் வழங்கப் படுகிறது. நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பொறியியல், மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில், 50 பொருட்களின் ஏற்றுமதி மதிப்பில், 1 சதவீதம், கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் குல்லார் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)