பதிவு செய்த நாள்
17 அக்2011
09:20
கரூர்: டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், கரூர் மாவட்டத்தில் ஏழு மணி நேரத்தில் மூன்று கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் மதுபான விற்பனை கன ஜோராக நடந்தது.தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக இன்றும் (17 ம் தேதி) நாளை மறுநாளும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் வரும் 21 ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அனுமதி பெற்ற பார்களையும் திறக்க கூடாது. இதனால் குடிமகன்கள் மதுபான வகைகளை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்ள நேற்று முன்தினம் காலையில் இருந்து போட்டி போட்டனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் மதுபான கடைகளிலும் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, தேர்தல் பிரச்சாரத்தை விட டாஸ்மாக் மதுபான கடைகளில் வியாபாரம் அனல் பறந்தது. ஏழு மணி நேரத்தில் 9,096 மதுபான பெட்டிகளும், 2,314 பீர் பாட்டில் பெட்டிகளும் விற்றது. மொத்தமாக மூன்று கோடியே 52 லட்சத்து 23 ஆயிரத்து 530 ரூபாய் மதிப்பில் மதுபானங்களின் விற்பனை நடந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|