பதிவு செய்த நாள்
23 அக்2011
16:16
மும்பை : அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையை இரட்டிப்பாக்க ஜப்பானிய எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு தங்கள் வருமானம் ரூ.5,500 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அடுத்த ஆண்டுக்கள் லாபத்தை 2 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பானாசோனிக் இந்தியா நிறுவன தலைவர் டெய்சோ இட்டோ தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் பானாசோனிக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 105 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்நிறுவனத்தின் தொழில் வருமானம் ரூ.3200 கோடியாகும். அடுத்த ஆண்டு தனது ஏசி சந்தை மதிப்பை 12 சதவீதமும், எல்.சி.டி., மற்றும் எல்.இ.டி., டிவிக்களின் சந்தையை 18 சதவீதமும், பிளாஸ்மா விற்பனையை 60 சதவீதமும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|