பதிவு செய்த நாள்
24 அக்2011
00:24
தினசரி பத்திரிகைகளை புரட்டினால், அமெரிக்காவில் பிரச்னை, ஐரோப்பாவில் நிதிநெருக்கடி, இந்தியாவில் கூடி வரும் பணவீக்கம் என்ற செய்திகள் தான் ஆக்கிரமித்துள்ளன.தற்போதைய நிலையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நிலை, சிறிது பரவாயில்லை. இவற்றை விட, சிறந்த நாடுகள் உள்ளனவா? இந்தி யாவிலிருந்து அங்கு முதலீடுகள் செய்ய முடியுமா? எவ்வளவு செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பது தான், இந் தக் கட்டுரையின் நோக்கம். உங்கள் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியுமா?: இந்தியாவிலி ருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல, பல தடைகள் உள்ளன. அதே சமயம், கடந்த சில வருடங்களாக, அரசின் கைவசம் உள்ள செலாவணி இருப்பு, தேவையான அளவுக்கு இருப்பதால், வெளிநாடுகளில் சென்று முதலீடு செய்யலாம் என்று, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை எப்படி முதலீடு செய்யலாம்? எந்த அளவிற்கு முதலீடு செய்யலாம்? என்பது குறித்து பார்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம்?:ஒருவர், வருடத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யலாம் (இது, கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்). வெளி நாடுகளின், சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, நிலம், வீடு, அபார்ட்மென்ட், பங் குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்டுகள் என, எதில் வேண்டுமானாலும் முதலீடு செய் யலாம். ஒருவரது வீட்டில், 4 பேர் இருந்தால், 4 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கடந்த ஓராண்டில் கிடைத்த லாபம்?:பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், உலகளவில் கடந்த 12 மாதங்கள் மிகவும் மந்தம் தான். ஆனால், அதற்கு முன்பாக, பல நிதியங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு, 30 முதல் 40 சதவீதம் வரை, லாபம் கிடைத்துள்ளது.வெளிநாடுகளில், முதலீடு செய்யும் போது, வட்டி / வருமானங்கள் மிகவும் குறைவாகக் கிடைத்தாலும், இந்திய ரூபாய்க்கு எதிரான, டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், இதன் வாயிலாகக் கிடைக்கும் லாபம் உயர்ந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஓராண்டிற்கு முன், ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதலீடு செய் திருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு, 45 ரூபாய் என்ற அளவில் இருந்திருந் தால், அவர் 10 ஆயிரம் டாலர்கள் முதலீடு செய்திருப்பார்.இதற்கு, டிவிடெண்டு வாயிலாக, 6 சதவீதம் கிடைத்தால், அவ ருடைய கணக்கில், 10 ஆயிரத்து 600 டாலர்கள் கிடைத்திருக்கும். அதை, தற்போது, இந்தியாவிற்கு கொண்டு வர நினைத்தால், டாலரின் மதிப்பு 49.50 ரூபாயாக உள்ள நிலையில், அவ ருடைய கணக்கிற்கு, 5 லட்சத்து 24 ஆயிரத்து 700 ரூபாய் கிடைத்திருக்கும்.ஆக, ஒரு வருடத்தில், 4 லட்சத்து 50 ஆயி ரம் ரூபாய் முதலீட்டு மதிப்பு, இன்று 5 லட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்ந்திருக்கும். அதாவது, 17.2 சதவீத வருமானம் கிடைத்திருக்கும். அதேசமயம், அமெரிக்க டாலருக்கு எதிராக, ரூபாய் மதிப்பு குறையும் நிலையில் தான், இது சாத்திய மாகும்.மேலும், ஒரு சில நாடுகள் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத் திற்கு, வரி பிடித்தம் செய்துவிடும் என்பதையும், நினைவில் கொள்ள வேண்டும். யார் மூலம் முதலீடு செய்யலாம்? :பல ஆன்-லைன் நிறுவனங்கள் (ஐ.சி.ஐ.சி.ஐ. டைரக்ட் போன்றவை) அயல்நாட்டில் முதலீடு மேற்கொள்ளும் வசதிகளை வழங்குகின்றன. அந்நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள புரோக்கர்கள் / கம்பெனி களுடன் இணைந்து, இந்த வசதியை அளிக்கின்றன. என்னிடம் பணம் அதிகமில்லை என்ன செய்வது?:அதிகம் பணமில்லாதவர்கள் கூட, நாடுகள் வாரியாக, இந்திய மியூச் சுவல் பண்டுகள் ஏற்படுத்தியுள்ள பண்ட் களில், முதலீடு செய்யலாம். அதாவது, இந்நிறுவனங்கள் பல்வேறு முதலீட் டாளர்களிடமிருந்து, குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவில் திரட்டி, அந்த ஒட்டுமொத்த தொகையை, குறிப்பிட்ட நாடுகளில் முதலீடு செய்கின்றன. இதற்காக, ஜப்பான் பண்ட், சீனா பண்ட், அமெரிக்க பண்ட், லத்தீன் அமெரிக்க பண்ட், பிரேசில் பண்ட், கோல்டு மைனிங் பண்ட், வேர்ல்டு அக்ரி பண்ட் என்ற பலவகை பண்டுகள் உள்ளன. எனவே இதுபோன்ற பண்டுகளில் முதலீடு செய்ய லாம்.இனிமேல்...இதுவரை, உள்நாட்டு பங்குச் சந்தைகளை தான் கவனித்து வந்தீர்கள். இனி, வெளிநாட்டு பங்குச் சந்தைகளையும் கவனிக்க ஆரம்பியுங்கள். எங்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கிறதோ, அங்கு சென்று, முதலீட்டிற்கு அதிக வருவாய் ஈட்டலாம். - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|