இந்தியாவில் விற்பனையை இரட்டிப்பாக்க பானாசோனிக் திட்டம்இந்தியாவில் விற்பனையை இரட்டிப்பாக்க பானாசோனிக் திட்டம் ... நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள்வழங்கிய கடன் 24 சதவீதம் சரிவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள்வழங்கிய கடன் 24 சதவீதம் சரிவு:- பிசினஸ் ... ...
வெளிநாட்டு முதலீடு லாபம் அளிக்குமா?:திட்டங்களும், ஆலோசனையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:24

தினசரி பத்திரிகைகளை புரட்டினால், அமெரிக்காவில் பிரச்னை, ஐரோப்பாவில் நிதிநெருக்கடி, இந்தியாவில் கூடி வரும் பணவீக்கம் என்ற செய்திகள் தான் ஆக்கிரமித்துள்ளன.தற்போதைய நிலையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நிலை, சிறிது பரவாயில்லை. இவற்றை விட, சிறந்த நாடுகள் உள்ளனவா? இந்தி யாவிலிருந்து அங்கு முதலீடுகள் செய்ய முடியுமா? எவ்வளவு செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பது தான், இந் தக் கட்டுரையின் நோக்கம். உங்கள் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியுமா?: இந்தியாவிலி ருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல, பல தடைகள் உள்ளன. அதே சமயம், கடந்த சில வருடங்களாக, அரசின் கைவசம் உள்ள செலாவணி இருப்பு, தேவையான அளவுக்கு இருப்பதால், வெளிநாடுகளில் சென்று முதலீடு செய்யலாம் என்று, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை எப்படி முதலீடு செய்யலாம்? எந்த அளவிற்கு முதலீடு செய்யலாம்? என்பது குறித்து பார்க்கலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம்?:ஒருவர், வருடத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யலாம் (இது, கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்). வெளி நாடுகளின், சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, நிலம், வீடு, அபார்ட்மென்ட், பங் குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்டுகள் என, எதில் வேண்டுமானாலும் முதலீடு செய் யலாம். ஒருவரது வீட்டில், 4 பேர் இருந்தால், 4 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கடந்த ஓராண்டில் கிடைத்த லாபம்?:பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், உலகளவில் கடந்த 12 மாதங்கள் மிகவும் மந்தம் தான். ஆனால், அதற்கு முன்பாக, பல நிதியங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு, 30 முதல் 40 சதவீதம் வரை, லாபம் கிடைத்துள்ளது.வெளிநாடுகளில், முதலீடு செய்யும் போது, வட்டி / வருமானங்கள் மிகவும் குறைவாகக் கிடைத்தாலும், இந்திய ரூபாய்க்கு எதிரான, டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால், இதன் வாயிலாகக் கிடைக்கும் லாபம் உயர்ந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஓராண்டிற்கு முன், ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதலீடு செய் திருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு, 45 ரூபாய் என்ற அளவில் இருந்திருந் தால், அவர் 10 ஆயிரம் டாலர்கள் முதலீடு செய்திருப்பார்.இதற்கு, டிவிடெண்டு வாயிலாக, 6 சதவீதம் கிடைத்தால், அவ ருடைய கணக்கில், 10 ஆயிரத்து 600 டாலர்கள் கிடைத்திருக்கும். அதை, தற்போது, இந்தியாவிற்கு கொண்டு வர நினைத்தால், டாலரின் மதிப்பு 49.50 ரூபாயாக உள்ள நிலையில், அவ ருடைய கணக்கிற்கு, 5 லட்சத்து 24 ஆயிரத்து 700 ரூபாய் கிடைத்திருக்கும்.ஆக, ஒரு வருடத்தில், 4 லட்சத்து 50 ஆயி ரம் ரூபாய் முதலீட்டு மதிப்பு, இன்று 5 லட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்ந்திருக்கும். அதாவது, 17.2 சதவீத வருமானம் கிடைத்திருக்கும். அதேசமயம், அமெரிக்க டாலருக்கு எதிராக, ரூபாய் மதிப்பு குறையும் நிலையில் தான், இது சாத்திய மாகும்.மேலும், ஒரு சில நாடுகள் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத் திற்கு, வரி பிடித்தம் செய்துவிடும் என்பதையும், நினைவில் கொள்ள வேண்டும். யார் மூலம் முதலீடு செய்யலாம்? :பல ஆன்-லைன் நிறுவனங்கள் (ஐ.சி.ஐ.சி.ஐ. டைரக்ட் போன்றவை) அயல்நாட்டில் முதலீடு மேற்கொள்ளும் வசதிகளை வழங்குகின்றன. அந்நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள புரோக்கர்கள் / கம்பெனி களுடன் இணைந்து, இந்த வசதியை அளிக்கின்றன. என்னிடம் பணம் அதிகமில்லை என்ன செய்வது?:அதிகம் பணமில்லாதவர்கள் கூட, நாடுகள் வாரியாக, இந்திய மியூச் சுவல் பண்டுகள் ஏற்படுத்தியுள்ள பண்ட் களில், முதலீடு செய்யலாம். அதாவது, இந்நிறுவனங்கள் பல்வேறு முதலீட் டாளர்களிடமிருந்து, குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவில் திரட்டி, அந்த ஒட்டுமொத்த தொகையை, குறிப்பிட்ட நாடுகளில் முதலீடு செய்கின்றன. இதற்காக, ஜப்பான் பண்ட், சீனா பண்ட், அமெரிக்க பண்ட், லத்தீன் அமெரிக்க பண்ட், பிரேசில் பண்ட், கோல்டு மைனிங் பண்ட், வேர்ல்டு அக்ரி பண்ட் என்ற பலவகை பண்டுகள் உள்ளன. எனவே இதுபோன்ற பண்டுகளில் முதலீடு செய்ய லாம்.இனிமேல்...இதுவரை, உள்நாட்டு பங்குச் சந்தைகளை தான் கவனித்து வந்தீர்கள். இனி, வெளிநாட்டு பங்குச் சந்தைகளையும் கவனிக்க ஆரம்பியுங்கள். எங்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கிறதோ, அங்கு சென்று, முதலீட்டிற்கு அதிக வருவாய் ஈட்டலாம். - சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)