வெளிநாட்டு முதலீடு லாபம் அளிக்குமா?:திட்டங்களும், ஆலோசனையும்வெளிநாட்டு முதலீடு லாபம் அளிக்குமா?:திட்டங்களும், ஆலோசனையும் ... இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 346 கோடி டாலர்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 346 கோடி டாலர்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ...
நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள்வழங்கிய கடன் 24 சதவீதம் சரிவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2011
00:25

இந்திய வங்கிகள், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிந்த அரையாண்டு காலத்தில், நிறுவனங்களு க்கு வழங்கிய கடன்கள் 24 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 51 ஆயிரத்து 72 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 440 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது குறித்து, கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறைந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போன்று, பல்வேறு நிறுவனங்கள், மூல தனச் சந்தையில் இருந்து திரட்டிய நிதியும்,சென்ற ஆண்டு இதே காலத்தை விட, 38 சதவீதம் சரிவடைந் துள்ளது.அதே சமயம்,இந்திய நிறுவனங்கள், அயல் நாடுகளில் கடன் பத்திரங்கள் வாயிலாக,அதிக அளவிற்கு நிதி திரட்டிக் கொண் டுள்ளன. நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், இந்நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் திரட்டியுள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 756 கோடி டாலராக இருந்தது. இந்தியாவை விட, வெளிநாடுகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது தான், இதற்குக் காரணமாகும். சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பங்குச் சந்தையிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடு, 210 கோடி டாலராக இருந்தது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 2,000 கோடி டாலர் என்ற அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. இதே காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, இரு மடங்கு உயர்ந்து, 1,454 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டின் இறுதியில், 3,500 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படு கிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், 1,940 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப் பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டின், சென்ற ஜூன் மாதம் வரையிலான முதல் காலண்டில், ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 2,508 நிறுவனங்களின் நிகர விற்பனை, 27.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிகர லாபம் 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. எனி னும், நிகர லாப வரம்பு, 7.3 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில், நிறுவனங்களின் செயல்பாடு, மிதமான அளவிலேயே இருக்கும் என்று, ஆய்வறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)