பதிவு செய்த நாள்
25 அக்2011
01:17
மும்பை:வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், 5 மாத காலத்திற்குப் பிறகு நேற்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால் இதன் பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட 60 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சத்தீஸ்கரை சேர்ந்த வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், öŒன்ற ஏப்ரல் 29ம் தேதி பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பங்கு ஒன்றின் விலை 49 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மே மாதம் 10ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செயப்பட்டன.இந்நிலையில், ஏராளமானோர் பங்கு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி'க்கு புகார்கள் வந்தன.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசணையில், பங்குகள் வேண்டி 4.16 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், ஆனால், திரும்ப பெறப்பட்ட விண்ணப்பங்கள் நீங்கலாக 1.28 மடங்குகள் என்ற அளவிற்கே விண்ணப்பங்கள் வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.நிறுவனங்கள் Œõராத முதலீட்டாளர் பிரிவு மற்றும் சில்லறை முதலீட்டாளர் பிரிவில் பங்குகளை ஒதுக்கீடு செ#ததில் விகிதாச்ணூர நடைமுறையை கடைபிடிக்காததால், பங்கு ஒதுக்கீடு செயப்பட்டவர்களுக்கு, திரும்ப பங்குகளை ஒப்படைக்க öŒபி உத்தரவிட்டது. இதை எதிர்த்து வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ், பங்கு வெளியீடு தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. இதையடுத்து 15 லட்சம் பங்குகளை திரும்ப பெற கால அவகாசம் அளித்து, பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் என தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இப்பங்குகள் வெளியீட்டு விலையை விட 60 சதவீதம் வீழ்ச்சி கண்டு 17.75 ரூபா#க்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|