பதிவு செய்த நாள்
26 அக்2011
02:27

இந்தியாவில் விமான சேவை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில், அன்னிய விமானச் சேவை நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டீ.ஐ.பி.பி)ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய விமானத் துறையில், அடிப்படை கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்பு தல் அளித்துள்ளது. எனினும், உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங் களில்,அன்னிய நேரடி முதலீடு மேற் கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை நீக்கி, இந்திய விமானச் சேவை நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்ள அனு மதிக்க வேண்டும் என, இத்துறையைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இக்கோரிக்கை குறித்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் டீ.ஐ.பி.பி பரிசீலித்து வந்தது. முடிவில்,உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களில், 26 சதவீத அன்னிய விமான நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்று டீ.ஐ.பி.பி. அதன் வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனினும், உள்நாட்டு விமான நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்களின் முதலீட்டு உச்சவரம்பை, 24 சதவீதம் என்ற அளவிலோ அல்லது அதற்கு கீழாகவோ குறைக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய விமான நிறுவனங்களில், 25 சதவீதத்திற்கு மேல் பங்கு முதலீட்டை கொண்டிருக்கும் பட்சத்தில், அன்னிய விமான நிறுவனங்கள், எத்தகைய சிறப்பு தீர்மானத்தையும்,செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் தடுத்து நிறுத்த முடியும் என்று அமைச்சகம் அச்சம் தெரிவித்துள் ளது. அதனால், 24 சதவீத அளவிற்கு அன்னிய விமான நிறுவனங்களின் முதலீட்டு உச்சவரம்பை நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கருத்தை டீ.ஐ.பி.பி மறுத்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங் கள் அனைத்தும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டு வரம்பை 24 சதவீதமாக குறைப்ப தால், நிர்வாக ரீதியாக எந்தவொரு முடிவையும் அன்னிய விமான நிறுவனங்களால் எடுக்க முடியாதசூழல் ஏற்படும். இதனால், இந்திய விமான நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வராது என,டீ.ஐ.பி.பி அதி காரி ஒருவர் தெரிவித்தார். எனினும்,இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார். மத்திய அமைச்சரவைக் குழு,டீ.ஐ.பி.பி-ன் வரைவு அறிக்கையை அடுத்த இரு வாரங்களுக்குள் பரிசீலித்து, அன்னிய விமான நிறுவனங்களின் முதலீட்டு உச்சவரம்பை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் தனியார் துறையை சேர்ந்த விமானச் சேவை நிறுவனங்கள், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளன.சென்ற 2010-11ம் ஆண்டில், பொதுத்துறையை சேர்ந்த ஏர்- இந்தியா நிறுவனம், 6,690 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. முந்தைய நிதியாண்டில், தனியார் துறையை சேர்ந்த கோ ஏர் நிறுவனம், 65 கோடியே 50 லட்ச ரூபாய் இழப்பை கண்டது. சென்ற நிதியாண்டில், இன்டிகோ நிறுவனம் மட்டும் 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 264 கோடி ரூபாயும், ஜெட் ஏர்வேஸ் 123 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்துள்ளன. இந்திய விமானச் நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ள, அன்னிய விமானச் சேவை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள உள்நாட்டு விமான நிறு வனங்களுக்கு புத்துயிர் அளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில்,விமான போக்குவரத்து சேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.எனினும், அதிகரித்து வரும் எரி பொருள் விலை, நிர்வாக செலவு உள்ளிட்டவற்றால் விமான நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.நடுத்தர வகுப்பினரின் வருவாய் உயர்ந்துள்ளதால்,அடுத்து வரும் ஆண்டுகளில் விமான போக் குவரத்து துறை மேலும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 12 விமான நிலையங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ற நிதியாண்டில் உள்நாட்டு விமான நிலையங்கள், 14 கோடியே 20 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டை விட, 15 சதவீத வளர்ச்சி என அசோசெம் தெரிவித்துள்ளது.வரும் 2025ம் ஆண்டில், விமான பயணிகளின் எண்ணிக்கை 54 கோடியாக உயரும் என்றும், விமானங்களின் எண்ணிக்கை, 430 என்ற அளவில் இருந்து 1,500 ஆக பெருகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து சேவை 23 லட்சம் டன்னில் இருந்து, 90 லட்சம் டன்னாக உயரும். அடுத்த 15 ஆண்டுகளில், இந்திய விமான துறையில் 3,000 கோடி டாலர் அளவிற்கு முதலீடு தேவைப்படும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது. இதில், அன்னிய விமான நிறுவனங்களின் பங்கு முதலீடும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும். உள் நாட்டில், சரக்கு விமான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|