போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது!போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது! ... பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வரும் நவம்பர் மாதத்திற்கு 19.15 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
00:36

புதுடில்லி:மத்திய அரசு, வரும் நவம்பர் மாதத்திற்கு, பொது வினியோகத்திற்காக 19.15 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்துள்ளது. இது,நடப்பு அக்டோபர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்ததை விட,(19.95 லட்சம் டன்) 82 ஆயிரம் டன் குறைவாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்திற்கு, அதிகளவில் ஒதுக் கீடு செய்ததாக, மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 19.15லட்சம் டன் சர்க்கரை,வெளிச் சந்தை மற்றும் பொது வினியோக திட்டத்திற்கு போதுமானதாகும். இதில், 17.01 லட்சம் டன் சர்க்கரை வெளிச் சந்தையில் விற்பனைக் கும், 2.14 லட்சம் டன் பொது வினியோக திட்டத்தின் வாயிலாகவும் வினியோகிக்கப்படும். மத்திய அரசின் உணவு அமைச்சகம்,நாட்டின் சர்க்கரை தேவையை பொறுத்து,சர்க்கரைஆலைகளிலிருந்து,பொது வினியோகம் மற்றும் வெளிச்சந்தைக்கு சர்க்கரையை ஒதுக்கீடு செய்து வருகிறது.சர்க்கரை ஆலைகள்பொது வினி யோக திட்டத்திற்கு, அவற்றின் மொத்த சர்க்கரை உற்பத்தியில்10சதவீதத்தை விலையில் அரசுக்குவழங்க வேண் டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், சர்க்கரையின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்பொழுது இதன் விலை 40 சதவீதம் குறைந்து, ஒரு கிலோ 30-32 ரூபாய் என்ற அளவில் உள்ளது.தற்போது நாட்டின் சர்க் கரை உற்பத்தி, 2.43 கோடி டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை ஆண்டுக்கு 2.10 - 2.15 கோடி டன் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)