பதிவு செய்த நாள்
28 அக்2011
00:36
புதுடில்லி:மத்திய அரசு, வரும் நவம்பர் மாதத்திற்கு, பொது வினியோகத்திற்காக 19.15 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்துள்ளது. இது,நடப்பு அக்டோபர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்ததை விட,(19.95 லட்சம் டன்) 82 ஆயிரம் டன் குறைவாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்திற்கு, அதிகளவில் ஒதுக் கீடு செய்ததாக, மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 19.15லட்சம் டன் சர்க்கரை,வெளிச் சந்தை மற்றும் பொது வினியோக திட்டத்திற்கு போதுமானதாகும். இதில், 17.01 லட்சம் டன் சர்க்கரை வெளிச் சந்தையில் விற்பனைக் கும், 2.14 லட்சம் டன் பொது வினியோக திட்டத்தின் வாயிலாகவும் வினியோகிக்கப்படும். மத்திய அரசின் உணவு அமைச்சகம்,நாட்டின் சர்க்கரை தேவையை பொறுத்து,சர்க்கரைஆலைகளிலிருந்து,பொது வினியோகம் மற்றும் வெளிச்சந்தைக்கு சர்க்கரையை ஒதுக்கீடு செய்து வருகிறது.சர்க்கரை ஆலைகள்பொது வினி யோக திட்டத்திற்கு, அவற்றின் மொத்த சர்க்கரை உற்பத்தியில்10சதவீதத்தை விலையில் அரசுக்குவழங்க வேண் டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், சர்க்கரையின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்பொழுது இதன் விலை 40 சதவீதம் குறைந்து, ஒரு கிலோ 30-32 ரூபாய் என்ற அளவில் உள்ளது.தற்போது நாட்டின் சர்க் கரை உற்பத்தி, 2.43 கோடி டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை ஆண்டுக்கு 2.10 - 2.15 கோடி டன் என்ற அளவில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|