பதிவு செய்த நாள்
28 அக்2011
00:39
மும்பை:வடமாநில பகுதிகளில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப் பட்டது, இதன் காரணமாக,மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள், அன்னியச்செலாவணி மற்றும் நிதிச்சந்தைகளுக்கு நேற்று விடுமுறையாக இருந்தது.இந்நிலையில்,நேற்று முன்தினம் நடைபெற்ற முகூர்த்த வணிகத் தில்,மேற்கண்ட இரண்டு பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் ஓர் அளவிற்கு நன்கு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும்,தீபாவளியின் போது,புது கணக்கு துவங் கப்பட்டு வர்த்தகம் நடைபெறும், இவ்வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஒன்றரை மணி நேர பங்கு வியாபாரத்தில்,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டுஎண், 33.97புள்ளிகள் அதிகரித்து,17,288.83புள்ளிகளிலும்,தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 10.20 புள்ளிகள் உயர்ந்து, 5,201.80 புள்ளிகளிலும் நிலை கொண்டன. மேலும், தங்கம்,வெள்ளி,எண்ணெய் வித்துக்கள்,உணவு தானியங்கள்,பருத்தி மற்றும் உலோகம்உள்ளிட்ட சந்தைகளுக்கும்,நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|