பங்குச் சந்தைகளுக்கு விடுமுறைபங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ... உணவுப் பொருள் பணவீக்கம் 11.43 சதவீதமாக உயர்வு உணவுப் பொருள் பணவீக்கம் 11.43 சதவீதமாக உயர்வு ...
நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
00:45

புதுடில்லி:இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி,4வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.போர்ப்ஸ் இதழ், இந்தியாவின் பெரும் பணக் காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில்,முகேஷ் அம்பானி 2,260 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முத லிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற சிறப்பை உருக் காலை அதிபர் லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) பெற்றுள்ளார். விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி (1,300 கோடிடாலர்)மூன்றாவது இடத்தை பிடித் துள்ளார்.இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில்,எஸ்ஸார் குழுமத்தின் சசிமற்றும் ரவி ரூயா சகோதரர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 1,020 கோடிடாலராக உள்ளது. ஐந்தாவது இடத்தில் சாவித்ரி ஜிந்தால் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 950 கோடி டாலராக உள்ளது.பண வீக்கம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாயின்வெளி மதிப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால்,ஆய்விற்கு எடுத்துக் கொள் ளப்பட்ட இந்திய பணக்காரர்கள் 100 பேரின் சொத்து மதிப்பு,20 சதவீதம்(24,100 கோடிடாலர்) குறைந்துள்ளது. இதில்,முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, சென்ற ஆண்டை விட 440 கோடி டாலர் குறைந்துள்ளது. லஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது. அசீம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு,சென்ற ஆண்டை விட26 சதவீதம்(1,760 கோடி டாலர் )குறைந்துள்ளது.சொத்து மதிப்பில்,முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித் துள்ள நிலையில்,அவரது சகோதரர் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள் ளது. இவரது சொத்து மதிப்பு 740 கோடி டாலர் சரிவடைந்து,1,330 கோடி டாலர் என்ற அளவில் இருந்து 590 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனால், கடந்த 6 வருடங்களாக,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்த அனில் அம்பானி, இவ்வாண்டு 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இவ்வாண்டு,இந்தியாவின்100பெரும் பணக் காரர்கள் பட்டியலில், 14 பேர் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.அவர்களில், இண்டஸ் காஸ் நிறுவனர்அஜய்கல்சி (139 கோடி டாலர்), இன்டர் குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனர்கள் கபில் மற்றும் ராகுல் பாட்டியா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)