பதிவு செய்த நாள்
28 அக்2011
00:45
புதுடில்லி:இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி,4வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.போர்ப்ஸ் இதழ், இந்தியாவின் பெரும் பணக் காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில்,முகேஷ் அம்பானி 2,260 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முத லிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற சிறப்பை உருக் காலை அதிபர் லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) பெற்றுள்ளார். விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி (1,300 கோடிடாலர்)மூன்றாவது இடத்தை பிடித் துள்ளார்.இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில்,எஸ்ஸார் குழுமத்தின் சசிமற்றும் ரவி ரூயா சகோதரர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 1,020 கோடிடாலராக உள்ளது. ஐந்தாவது இடத்தில் சாவித்ரி ஜிந்தால் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 950 கோடி டாலராக உள்ளது.பண வீக்கம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாயின்வெளி மதிப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால்,ஆய்விற்கு எடுத்துக் கொள் ளப்பட்ட இந்திய பணக்காரர்கள் 100 பேரின் சொத்து மதிப்பு,20 சதவீதம்(24,100 கோடிடாலர்) குறைந்துள்ளது. இதில்,முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, சென்ற ஆண்டை விட 440 கோடி டாலர் குறைந்துள்ளது. லஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது. அசீம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு,சென்ற ஆண்டை விட26 சதவீதம்(1,760 கோடி டாலர் )குறைந்துள்ளது.சொத்து மதிப்பில்,முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித் துள்ள நிலையில்,அவரது சகோதரர் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள் ளது. இவரது சொத்து மதிப்பு 740 கோடி டாலர் சரிவடைந்து,1,330 கோடி டாலர் என்ற அளவில் இருந்து 590 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனால், கடந்த 6 வருடங்களாக,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்த அனில் அம்பானி, இவ்வாண்டு 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இவ்வாண்டு,இந்தியாவின்100பெரும் பணக் காரர்கள் பட்டியலில், 14 பேர் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.அவர்களில், இண்டஸ் காஸ் நிறுவனர்அஜய்கல்சி (139 கோடி டாலர்), இன்டர் குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனர்கள் கபில் மற்றும் ராகுல் பாட்டியா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|