பதிவு செய்த நாள்
04 நவ2011
00:35
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்டோபர் 22ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 12.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 11.43 சதவீதமாக இருந்தது. ஆக, உணவுப் பொருள் பணவீக்கம், 0.78 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருள் பணவீக்கம், தொடர்ந்து மூன்று வாரங்களாக, இரட்டை இலக்க அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், காய்கறிகள் விலை, 28.89 சதவீத அளவிற்கு அதிகரித்துள் ளது.மேலும்,பருப்பு வகைகள் (11.65 சதவீதம்),பழங்கள்(11.63 சதவீதம்),பால்(11.73 சதவீதம்)ஆகியவற்றின் விலை யும் உயர்ந்திருந்தது.இதுதவிர,மீன்,முட்டை,இறைச்சி ஆகிய வற்றின் விலை,13.36 சதவீதமும்,உணவு தானியங்கள் விலை, 4.13 சதவீதமும் அதிகரித்துள்ளது.இருப்பினும், வெங்காயத்தின் விலை, 20.33 சதவீதமும், கோதுமை விலை, 1.54 சதவீதம் என்ற அளவிலும் குறைந்திருந்தது. முக்கிய பொருட்களின் விலை, 12.08 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள் ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 11. 75 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.உணவு சாராத பொருட்கள் பிரிவின் கீழ், நூலிழை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாதுப் பொருட்களின் விலை, 6.43 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 7.67 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை, 14.50 சதவீதம் என்ற அளவில் குறைந் துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில்,14.70 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.நாட்டின் பொதுப் பணவீக்கம், 2010ம் ஆண்டு டிசம்பர் முதல், 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. இது, கடந்த செப்டம்பர் மாதத்தில், 9.72 சதவீதமாக இருந்தது.பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், தற்போது வரை, 13 முறை உயர்த்தி யுள் ளது. மேலும், வரும் டிசம்பருக்குள் தேவைக்கும், அளிப்பிற்கும் இடையிலான பற்றாக்குறை குறைந்து, வரும் மார்ச் மாதத் திற்குள் பணவீக்கம், 7 சதவீதமாகக் குறையும் என, ரிசர்வ் வங்கி இரண்டாவது காலாண்டு நிதிக் கொள்கையின் போது தெரிவித்தது.பணவீக்க உயர்வு குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வருவது, கவலை அளிப்பதாக உள்ளது. பண்டிகைக் காலங்களையொட்டி, உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்க லாம். எனினும், நடப்பு நிதியாண்டின் கடைசி நான்கு மாதங்களில், பண வீக்கத்தின் உண்மை நிலை தெரிய வரும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|