பதிவு செய்த நாள்
06 நவ2011
14:05
மும்பை : பிடி காட்டன் மற்றும் கலப்பின விதைகள் தயாரிப்பு நிறுவனமான மகாராஷ்டிரா ஹைபிரிட் ஸீட்ஸ் கம்பெனியின் நடப்பு ஆண்டு வருமானம் 10 சதவீதம் அதி்கரித்து ரூ.690 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கலப்பின விதைகளின் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிகோ நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.627 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.112 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது பிடி காட்டன் விதைகள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட தயாரிப்புகளின் தேவை அதிகரித்து வருவதாகவும், சந்தையின் இதன் மதிப்பு உயர்ந்து வருவதாகவும் மகிகோ நிறுவன மேலாண் இயக்குனர் ராஜூ பர்வேல் தெரிவித்துள்ளார். தற்போது பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட பிடி கத்திரிக்காய்க்கு அரசின் அனுமதி பெறுவதற்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்த பின் விற்பனைக்கு விடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மகிகோ நிறுவனம் 35 தானிய வகைகளில் 200க்கும் மேற்பட்ட கலப்பினங்களை உருவாக்கி, சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|