பதிவு செய்த நாள்
12 நவ2011
00:03
புதுடில்லி:நாட்டின் உணவு பொருள் பணவீக்கம், அக்., 29ம் தேதி வரையிலான வாரத்தில், 11.81 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபர், 22ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 12.21 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில்,வெங்காயம்,கோதுமை உள்ளிட்ட ஒரு சில உணவு பொருட்களின் விலை,சற்று குறைந்திருந்தது.அதாவது, வெங்காயத்தின் விலை ஆண்டு கணக்கில் ஒப்பிடும் போது, அக்.,29ம் தேதிவரையிலான வாரத்தில்,19.31 சதவீதம் என்றளவிலும்,கோதுமையின் விலை,1.77 சதவீதம்என்றளவிலும் குறைந்திருந்தது.
முக்கியப் பொருட்களின் விலை, 11.43 சதவீதமாக குறைந்திருந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 12.08 சதவீ தமாக இருந்தது.மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில்,முக்கிய உணவு பொருட்களின் பங்களிப்பு,20 சதவீதம் என்றளவில் உள்ளது.இருப்பினும்,கணக்கீட்டு வாரத்தில்,காய்கறிகள் விலை,26.05 சதவீதம் என்றளவிலும்,பருப்பு வகை கள் விலை, 13.27 சதவீதம் என்றளவிலும் உயர்ந்திருந்தது.
இவை தவிர, பழங்கள்(11.70 சதவீதம்),பால்(11.79 சதவீதம்),முட்டை,இறைச்சி,மீன்(12.74 சதவீதம்),உருளைக் கிழங்கு(0.53 சதவீதம்),அரிசி(4.27 சதவீதம்) மற்றும் தானியங்கள், 4.07சதவீதம் என்றளவில் அதிகரித்திருந்தது. உணவு சாராத பிரிவின் கீழ், நூலிழை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாது பொருட்கள் போன்றவற்றின் விலை, 6.41 சதவீத மாக உயர்ந்திருந்தது. எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் விலை மாற்றமின்றி, 14.50 என்ற அளவிலேயே இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|