கடும் நிதி நெருக்கடியில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்:4 நாளில் 120 விமான சேவைகள் ரத்துகடும் நிதி நெருக்கடியில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்:4 நாளில் 120 விமான சேவைகள் ... ... குறைகிறது பெட்ரோல் விலை? குறைகிறது பெட்ரோல் விலை? ...
சிறுசேமிப்புத் திட்ட வட்டி உயர்வு : கிசான் விகாஸ் பத்திரம் இனி கிடையாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2011
09:30

புதுடில்லி : தபால் அலுவலகங்களில் சாதாரண சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் பொதுசேமநல நிதி திட்டம் போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: தபால் அலுவலக சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி வீதம் 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் திட்டம் (எம்.ஐ.எஸ்.,) மற்றும் பொதுசேமநல நிதி திட்டங்களுக்கான (பி.பி.எப்.,) வட்டி வீதம் 8.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு செய்யப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர கால அளவுடன் கூடிய டெபாசிட்களுக்கான வட்டி வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுசேம நல நிதியில் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரங்கள் இனி கிடையாது. ஐந்து ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி வீதம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்து ஆண்டில் முதிர்வடையக்கூடிய, 8.7 சதவீத வட்டியுடன் கூடிய, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும். மாதாந்திர வருவாய் திட்டம் முதிர்வடையும் போது வழங்கப்படும் 5 சதவீத போனஸ் இனி கிடையாது. பொதுசேமநல நிதி மற்றும் மூத்த குடிமக்கள் திட்டத்திற்கான ஏஜன்ட் கமிஷன் இனி கிடையாது. மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான முதிர்வு காலம், தற்போதுள்ள ஆறு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி வீதங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் முறையான அறிவிப்புக்குப் பின் அமலுக்கு வரும். வட்டி வீதத்தை உயர்த்தும் முடிவு, ஷியாமளா கோபிநாத் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)