பதிவு செய்த நாள்
15 நவ2011
10:35
கோல்கட்டா : டிஐஎல் குழுமத்தின் துணை நிறுவனமான டிராக்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (டிஐபிஎல்) நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டிராக்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியின் முன்னணி கேட்டர்பில்லர் உபகரணங்கள் வர்த்தக நிறுவனமான தாங்கள் திகழ்ந்து வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள், ரூ. 2 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். சாலைகள் மற்றும் ஹைட்ரோஎலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்சன் பிரிவே, தங்கள் நிறுவனத்தின் முன்னணி வர்த்தகம் ஆகும். சுரங்கம் மற்றும் டீசல் ஜெனரேட்டர் பிரிவு வர்த்தகமும் தற்போது களைகட்டத் துவங்கியுள்ளது. இதன்காரணமாகஙவ, வர்த்தகத்தை விரிவுபடுத்த தி்ட்டமி்ட்டுள்ளதாகவும், இலக்கை விரைவில் எட்டுவோம் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|