சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது ஏர்டெல்சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது ஏர்டெல் ... மத்திய,மாநில முகமை அமைப்புகளின்நெல் கொள்முதல் 1 கோடி டன்னை எட்டியது மத்திய,மாநில முகமை அமைப்புகளின்நெல் கொள்முதல் 1 கோடி டன்னை எட்டியது ...
மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டுபிரிமியம் 70 சதவீதம் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
00:50

மும்பை:பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டு பிரிமியம், 60 -70 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகன உரிமையாளர்களின் பிரிமியச் சுமை அதிகரிக்க உள்ளது.
மூன்றாம் நபர் காப்பீடு என்பது, வாகனங்களுக்கு ஏற்படும் சேதம், விபத்து உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை குறிக்கிறது. உதாரணமாக, விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கான இழப்பீட்டை, அந்த வாகன உரிமையாளர் சார்பாக, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.
இவ்வகையான காப்பீட்டில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிக இழுப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சென்றாண்டு, பொதுக்காப்பீட்டு துறை, மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான இழப்பீடு அளித்த வகையில், 10 ஆயிரத்து 250 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளன.
இந்நிøலையில், மூன்றாம் நபர் காப்பீட்டிற்கு, பொதுக் காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் ஒதுக்கும் தொகையை, 15-20 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜே.ஹரி நாராயண் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:மூன்றாம் நபர் காப்பீட்டுக்கு, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒதுக்கும் தொகை, 153 சதவீதத்தில் இருந்து, 175 -200 சதவீத அளவிற்கு உயர்த்தப்படும். புதிய காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கும், அதற்கான அனுமதி பெறுவதற்கும் உள்ள கால அளவு குறைக்கப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின், புதிய பங்கு வெளியீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு ஹரி நாராயண் கூறினார். மூன்றாம் நபர் காப்பீட்டிற்கு ஒதுக்கும் தொகை அதிகரிக்க உள்ளதால், இவ்வகை காப்பீட்டிற்கான பிரிமியம், 60-70 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)