பதிவு செய்த நாள்
24 நவ2011
16:17
ஐதராபாத் : திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வெங்கடேஷ்வர சுவாமி ஆலயத்திற்கு பக்தர் ஒருவர் 168 வைர கற்களை காணிக்கையாக செலுத்தி உள்ளார். நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பொருட்கள் மதிப்பும் பணி நடைபெற்றது. அப்போது வைர கற்கள் இருப்பதை கண்ட ஆலய பணியாளர் தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்தார். தற்போது இந்த வைர கற்கள் மதிப்பீடு செய்வதற்காக தேவஸ்தானத்திற்கு சொந்தமான நகை பட்டறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதிப்பீடும் பணி முடிந்த பிறகே இந்த வைரங்களின் மொத்த மதிப்பு தெரிய வரும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஓராண்டிற்கு இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் தொகை ரூ.700 கோடிக்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|