பதிவு செய்த நாள்
25 நவ2011
00:34
புதுடில்லி:சிமென்ட் விலை, 1 முதல் 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் கிரிசில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் டிசோசா கூறியதாவது:நாட்டில் சிமென்ட் பயன்பாடு, சீரான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. பண்டிகை காலம் முடிவடைந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதனால், சிமென்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் சிமென்ட் விலை, சராசரியாக ஆறு சதவீதம் என்றளவில் உயர்ந்து வந்த நிலையில், சென்ற அக்டோபர் மாதம், 50 கிலோ கொண்ட ஒருமூட்டை கொண்ட சிமென்ட், 280 ரூபாய்க்குவிற்பனையானது. இந்நிலையில்,சிமென்ட் விலை, மேலும் 1 முதல் 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
இதன்படி, மூட்டை ஒன்றுக்கு 3 ரூபாயிலிருந்து 6 ரூபாய் வரை உயரக் கூடும்.சென்ற அக்டோபர் மாதம், நாட்டின் மொத்த சிமென்ட் பயன்பாடு, 1.80 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாத பயன்பாட்டை விட, 0.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், 12.30 கோடி டன் சிமென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.- அ.ராஜன் பழனிக்குமார் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|