பதிவு செய்த நாள்
25 நவ2011
12:11
தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை அடிப்படையாக வைத்து, சென்னையில் இருந்து இயக்கப்படும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை செல்லும் ஆந்திர பஸ்களின் கட்டணம், ஏழு ரூபாய் உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடிலிருந்து, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு, 194 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன; திருப்பதி திருமலைக்கு மட்டும், 48 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.இதே போல், கர்நாடக போக்குவரத்துக் கழகம், சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூருக்கு பஸ்களை இயக்குகிறது.இவற்றின் கட்டணங்கள் தமிழக எல்லை வரை உள்ள தூரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஆந்திர பஸ்களில் மொத்தம் ஏழு ரூபாயும், கர்நாடக பஸ்களில் நான்கில் இருந்து ஐந்து ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து, ஆந்திர அரசின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி கூறுகையில், ""ஏற்கனவே இரு மாநிலங்களுக்கு இடையே செய்யப் பட்டுள்ள ஒப்பந்தப்படி, தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு ஏற்ப, ஆந்திர அரசு பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது,'' என்றார்.மேலும், ""சென்னை கோயம்பேடில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்களில், தமிழக எல்லை வரையிலான தூரத்திற்கு, தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண விகிதத்தை வசூலிக்கிறோம். இதனால், கட்டணம் சிறிதளவு உயர்ந்துள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|