ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ... தாதுப் பொருட்கள் உற்பத்தி  6 சதவீதம் குறைவு தாதுப் பொருட்கள் உற்பத்தி 6 சதவீதம் குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஆந்திர தேங்காய்க்கு கிராக்கி; தமிழக தேங்காய்க்கு மவுசு குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
00:08

நங்கவள்ளி: தரமான ஆந்திர தேங்காய் குறைந்த விலைக்கு கிடைப்பதால், தரம் குறைந்த தமிழக தேங்காயை, வடமாநிலங்கள் புறக்கணித்து விட்டன. தேங்காய் தேக்கம் அடைவதால், தமிழக வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர்.சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், நங்கவள்ளி பகுதியில், 100க்கும் மேற்பட்ட தேங்காய் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள், விவசாயிகளிடம் தேங்காயை மொத்தமாக கொள்முதல் செய்து, தங்கள் மண்டியில் வைத்து மட்டை உரித்து, அரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பினர்.சீசன் சமயத்தில் ஜலகண்டபுரம் பகுதியில் இருந்து தினமும், மூன்று முதல் ஐந்து லட்சம் தேங்காய்கள், லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டு ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.ஆந்திர தேங்காய்கள் தரமாக, பெரிதாக இருப்பது மட்டுமின்றி வடமாநிலங்களுக்கு அனுப்புவதற்கான செலவு குறைவு இருப்பதாலும், ஒரு தேங்காயை, 3 முதல், 3.50 ரூபாய்க்கு, வடமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.தமிழக தேங்காய்கள் தரம் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதால், நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்வதை, வடமாநில வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். கடந்த ஆண்டு இதே மாதம் நடுத்தர தேங்காய் ஒன்று, 6 ரூபாய்க்கு வியாபாரிகள் வடமாநிலங்களுக்கு விற்பனை செய்தனர்.அதனால், ஒரு மாதமாக ஜலகண்டபுரம் மண்டிகளில் தேங்காய்கள் விற்பனையாகாமல் தேங்குகிறது.வடமாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பிய வியாபாரிகள் தற்போது, காங்கேயம், திருப்பூர் பகுதிகளில் உள்ள எண்ணெய்ஆலைகளுக்கு தேங்காய்களை அனுப்புகின்றனர். ஆரம்பத்தில் ஒரு டன் தேங்காய், 11 ஆயிரம் முதல், 13 ஆயிரம் ரூபாய்க்கு எண்ணெய் ஆலைகள் கொள்முதல் செய்தது.தேங்காய் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் ஆலைகளும் தேங்காய் கொள்முதல் விலையை குறைத்து விட்டதால், நங்கவள்ளி, ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த சேர்ந்த தேங்காய் வியாபாரிகள் நஷ்டம் காரணமாக விரக்தியில் உள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)