பதிவு செய்த நாள்
28 நவ2011
00:09
புதுடில்லி: ஏஸஸ் டெக்னாலஜீஸ் (இந்தியா) நிறுவனம், நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம், ஜென்புக் யு31 என்ற நோட்புக் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் (இந்திய செயல்பாடு) அலெக்ஸ் ஹியாங் கூறியதாவது:இப்புதிய நோட்புக் கம்ப்யூட்டர், இரண்டாவது தலைமுறைக்கான இண்டல் கோர் பிராசஸர், 256 ஜிபி வரையிலான நினைவகத்திறன், புளூடூத் வி 4.0 மற்றும் யுஎஸ்பி 3.0 உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், இந்த நோட்புக் கம்ப்யூட்டரில் சூப்பர் ஹைபிரிட் இன்ஜின் ஐஐ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், பேட்டரியின் ஆயுள் 25 சதவீதம் அதிகமாக உள்ளது. இது தவிர, புள்ளி விவரங்களில் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பேட்டரியின் ஆயுள் 5 சதவீதத்திற்கும் குறைவாக வரும் போது, பைல்கள் அனைத்துமே தாமாகவே சேமிக்கப்பட்டு விடும்.சில்வர் நிற வெளிப்புற வடிவமைப்பு கொண்ட இவ்வகை கம்ப்யூட்டர்களின் விலை, 89 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|